செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழா

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையில் செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது.அதன் செடல் திருவிழா நடந்தது.
செங்கழுநீரம்மன் கோவில் செடல் விழாவில் பங்கேற்ற அ.ம.மு.க. இணைச்செயலாளர் லாவண்யாவுக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்த காட்சி.
செங்கழுநீரம்மன் கோவில் செடல் விழாவில் பங்கேற்ற அ.ம.மு.க. இணைச்செயலாளர் லாவண்யாவுக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையில் செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அதன் செடல் திருவிழா நடந்தது. இதில் அ.ம.மு.க. மாநில இணைச்செயலாளர் லாவண்யா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, கலியமூர்த்தி, சந்தோஷ், சிவலிங்கம், கணபதி, சிவக்குமார், முருகன், உறுப்பினர்கள் தவச்செல்வம், வேணு, ரவீந்திரன், ஐயனார், விஜயன் என்ற விஜி, மகிமை மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் வரவேற்றனர். பின்னர் லாவண்யாவுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளித்தனர்.

நிகழ்ச்சியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் லூர்துசாமி, மோகன், பாலா, விஜயன், கணேஷ் சரவணன், கோபி, சுந்தரமூர்த்தி, சபா, சரளா, சந்திரா, உமா, அமலர்சந்திரா, விஜி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com