மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில்முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

பட்டதாரி மாணவர்களுக்கு முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா.வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றினர்.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடந்த போது எடுத்த படம்.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடந்த போது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. தக்ஷஷீலா பல்கலைக்கழ கத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக் குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி கல்லூரியின் வடிவமைப்பு முதுகலை படிப்பின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றினர்.

கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் வரவேற்றார். தேர்வு கட்டுபாட்டா ளர் ஜெயக்குமார் முதுகலை பட்டப்படிப்பில் எதிர்கால தேவைக்கான பாடபுத்தகங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன என்று கூறினார். ஆராய்ச்சி மற் றும் மேம்பட்டு துறை யின் டீன் வேல்முருகன் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவது பற்றி கூறினார்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டீன் முத்து லட்சுமி முதுகலை பட்டம் படிப்பிற்கு இக்கல்லூரி சிறந்த கட்டமைப்பு உடையது என்று கூறினார். கணினி முதுகலை துறை தலைவர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com