எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பு சார்பில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பாலிசி போனசை உயர்த்த வேண்டும். கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்.
எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
Published on

புதுச்சேரி:

எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டமைப்பு சார்பில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் சக்தி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் பழனி, செயற்குழு உறுப்பினர் மாயக்கண்ணன், பொருளாளர் தாண்டவகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

பாலிசி போனசை உயர்த்த வேண்டும். கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரருக்கு சேவை அளிக்க வேண்டும். அனைத்து விண்ணப்பத்துக்கும் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். பாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும்.

முகவரின் பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ குழு காப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com