மணக்குள விநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு கும்பாபிஷேகம்

புதுவை மணக்குள விநாயகர் கோவில் உள்பு றத்தில் மூலவரை பார்த்த வண்ணம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. சண்டிகேஸ்வரர் கும்ப சென்டர் என பெயர் பெற்றவர்.சண்டிகேஸ்வரர் சன்னதி கோபுரம் 45 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டு கவச விமானம் பணி நிறைவடைந்துள்ளது.
மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னதி.
மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னதி.
Published on

புதுச்சேரி:

புதுவை மணக்குள விநாயகர் கோவில் உள்பு றத்தில் மூலவரை பார்த்த வண்ணம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

சண்டிகேஸ்வரர் கும்ப சென்டர் என பெயர் பெற்றவர். இவர் விநாயகரை பார்த்த வண்ணம் அமர்ந்திருப்பார். இவர் பக்தர்களுக்கு பூர்விக பூண்ணிய பலனை கொடுப்பவர். பக்தர்கள் கோவிலுக்கு வரும் பொழுது மணக்குள விநாயகரை தரிசித்து விட்டு கடைசியாக சண்டிகேஸ்வரரிடம் வந்து அவரை வணங்கி விட்டு உள்ளங்கையில் 3 முறை தட்டி விட்டு செல்வர்.

இவ்வாறு செய்தால் விநாயகரிடம் விடுத்த வேண்டுதல் மற்றும் பூஜை பலனை முழுவதுமாக சண்டிகேஸ்வரர் பக்தர்களுக்கு வாங்கி கொடுப்பார் என்பது ஐதீகம்.

சண்டிகேஸ்வரர் சன்னதி கோபுரம் 45 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டு கவச விமானம் பணி நிறைவடைந்துள்ளது.

இதன் கும்பாபிஷேகம்  1-ந் தேதி 11 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com