கூடோ போட்டி பரிசளிப்பு விழா

மாநில அளவிலான 3 நாள் கூடோ பயிற்சி முகாமை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கத்தில் நடத்தியது.கூடோ வீரர்கள்-வீராங்கனைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
கூடோ போட்டி பரிசளிப்பு விழா நடந்த போது எடுத்த படம்.
கூடோ போட்டி பரிசளிப்பு விழா நடந்த போது எடுத்த படம்.
Published on

புதுச்சேரி:

அகில இந்திய கூடோ சங்கமும் புதுவை மாநில கூடோ சங்கமும் இணைந்து புதுவை மாநில அளவிலான 3 நாள் கூடோ பயிற்சி முகாமை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கத்தில் நடத்தியது.

இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கூடோ வீரர்கள்-வீராங்கனைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பின்னர் பயிற்சி பெற்ற வீரர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பாட்டன. நிகழ்ச்சிக்கு புதுவை கூடோ சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தார்.

இதில் கவுரவ விருந்தி னராக கலந்து கொண்ட கோத்தாரி மேல்நிலைப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் கோத்தாரி மற்றும் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

நிகழ்ச்சியில் அகில இந்திய கூடோ பொருளாளர் ஜாஸ்மின் மகானா, சீனியர் பயிற்சியாளர்கள் மொகல் சாகித்யா, ராணா, நிர்வாகிகள் கோவிந்தராஜ், நடராஜ், செந்தில்வேல், பாலச்சந்தர், ஆறுமுகம், லட்சுமணன், கதிர்காமம் அசோக், பாலாஜி தியேட்டர் அசோக், காலப்பட்டு செல்வம், அண்ணா நகர் செல்வம், மகேஷ், காலாப்பட்டு சசிகுமார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com