

புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு விடுமுறை தினமான நாளை வெள்ளிக்கிழமை புனித வெள்ளியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. நோயாளிகள் அன்றயை தினம் ஜிப்மர் வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல இயங்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.