காரைக்காலில் அக்காள் இறந்த மனவேதனையில் தம்பி தற்கொலை

4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2012-ல் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.அக்காவை நினைத்து புலம்பி வந்துள்ளார்.
காரைக்காலில் அக்காள் இறந்த மனவேதனையில் தம்பி தற்கொலை
Published on

புதுச்சேரி:

காரைக்கால் மரியம் அவன்யூவைச்சேர்ந்தவர் முகம்மது இசாக். இவருக்கு இஸ்மத் நாச்சியாள் (வயது33) என்ற ஒரு பெண் குழந்தையும், அப்துல்ரஹ்மான் (32), ஜாகிர் உசேன் (31) ஆகிய 3 குழந்தைகள். இதில், இஸ்மத் நாச்சியாளுக்கு திருமணம் நடந்து, 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2012-ல் உடல்நிலை சரியில்ல மால் இறந்துவிட்டார். இதனால், ஜாகிர் உசேன் மனவே தனையில் இருந்துவந்தார். அடிக்கடி அக்காவை நினைத்து புலம்பி வந்தார். வெளிநாடுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து, தந்தை முகம்மது இசாக், ஜாகிர் உசேனை, கடந்த 3 ஆண்டு களுக்கு முன், சவுதிக்கு டிரைவர் வேலைகாக அனுப்பி வைத்தார்.

அங்கு சென்றும், அக்காவை நினைத்து புலம்பி வந்துள்ளார். திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து, பெண் பார்த்தனர். ஆனால், ஜாகிர் உசேன் திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். இந்நிலையில், கடந்த 22-ந் தேதி ஜாகிர் உசேன் வாந்தி எடுத்தார். தந்தை மற்றும் உறவினர்கள், ஜாகிர் உசேனை காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் விசாரித்தபோது, எலி பேஸ்டை, கூல்டிரிங்சில் கலந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com