காரைக்கால் கீழகாசாக்குடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

போலி ஆவணம் தயா ரித்து, தொடர்ந்து ஆக்கிர மித்து வருவதாக கூறப்படு கிறது. நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
காரைக்கால் கீழகாசாக்குடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி:

காரைக்கால் கீழ காசாக் குடி பகுதியில், புதுச்சேரி அரசு இந்து சமய அற நிலையத் துறைக்குட்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவி லுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பல்வேறு தரப்பி னர் போலி ஆவணம் தயா ரித்து, தொடர்ந்து ஆக்கிர மித்து வருவதாக கூறப்படு கிறது.

கோவிலுக்கு சொந்த மான நிலத்தை மீட்க பல்வேறு தரப்பினர் முயற்சித்து வந்தாலும், புதுச்சேரி அரசு இந்து அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்து அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி யினர் மற்றும் ஆதிபுரீஸ்வரர் தேவஸ்தான சொத்து மீட்புக் குழு, காரைக்கால் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாவட்ட இந்து முன்னணி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் இன்ஜினியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com