புதுவை கடற்கரையில் மாணவர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றிய கவர்னர்

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி நடந்தது.தூய்மை பணியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினார்.
புதுவை கடற்கரையில் மாணவர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றிய கவர்னர் கைலாஷ்நாதன்.
புதுவை கடற்கரையில் மாணவர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றிய கவர்னர் கைலாஷ்நாதன்.
Published on

புதுச்சேரி:

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோர காவல் படை சார்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி நடந்தது.

தூய்மை பணியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினார்.

அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., அரசு செயலர்கள் பத்மா ஜெய்ஸ்வால், ஜெயந்தகுமார் ரே, டி.ஜி.பி. அஜித்குமார் சிங்ளா, இந்திய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் எஸ். எஸ். தசிலா, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com