கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நிதி

மத்திய மந்திரியிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிக்கைசட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை மந்திரி சஞ்சீவ்குமார் பல்யான் நேற்று புதுவைக்கு வந்தார்.

சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவை மாநிலத்தில் கடற்கரை கிராமங்களில் கடுமையான கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் 45 மீனவ கிராமங்கள் அடுத்தடுத்து பாதிக்கப் பட்டுள்ளது.

எனவே கடல் அரிப்பை முற்றிலும் தடுக்க மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு செயலர் நெடுஞ்செழியன், தலைமை பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com