ஆரோவில்லில் வெளிநாட்டினர் முற்றுகை

ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடை யஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என கூறி அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
வெளிநாட்டினர் முற்றுகையில் ஈடுபட்ட காட்சி.
வெளிநாட்டினர் முற்றுகையில் ஈடுபட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடை யஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரம் அடுத்த தொரவி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.

ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி அதில் விவசாயம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியான மற்றொரு இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தினர்‌.

மேலும் அந்த இடம் ஆரோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என கூறி அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் அந்த இடத்தில் வெளிநாட்டினர் பணி செய்ய விடாமல் முற்றுகையிட்டு அமர்ந்தனர்.

இதுகுறித்து ஆரோவில் போலீசில் சுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். அந்த இடத்தில் ஆரோ வில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com