மாகி பிராந்திய மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

புதுவையின் பிராந்தியமான மாகி கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது.இங்கு 600-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவையின் பிராந்தியமான மாகி கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது.

இங்கு 600-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து புதுவை மீன்வளத்துறை மாகி மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைத்திரும்ப வேண்டும்.

மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com