கல்லூரிகளில் தி.மு.க. மாணவர் அமைப்பு தொடக்கம்

புதுவை கல்லூரிகளில் தி.மு.க. மாணவர் அமைப்பு தொடக்க விழா மாநில தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. மாணவர்கள் புதுவையின் வரலாற்றையும், ஆட்சி நிர்வாகத்தையும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கல்லூரிகளில் தி.மு.க. மாணவர் அமைப்பை சிவா எம்.எல்.ஏ. நடந்த காட்சி.
கல்லூரிகளில் தி.மு.க. மாணவர் அமைப்பை சிவா எம்.எல்.ஏ. நடந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை கல்லூரிகளில் தி.மு.க. மாணவர் அமைப்பு தொடக்க விழா மாநில தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

மாணவர்கள் புதுவையின் வரலாற்றையும், ஆட்சி நிர்வாகத்தையும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.புதுவை அரசு நிர்வாகத்தில் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படும் கவர்னர், தலைமை செயலர், நிதி செயலர் ஆகியோரே ஆட்சி செய்யும் அவல நிலை உள்ளது.

இது போக்கப்பட வேண்டும். பா.ஜனதா பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு வருகின்றது. இவைகளை தெரிந்து, புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் மாணவர்கள் இருந்தால் மட்டுமே நாம் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

இவ்வாறு சிவா பேசினார்.

நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், மாநில துணை அமைப்பாளர் அமுதாகுமார், தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி சங்கர், தர்மன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நசீர், மாணவர் அணி துணை அமைப்பாளர் அமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com