கைவினை கண்காட்சி

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சி யினை பள்ளி கல்விதுறை முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மாணவ-மாணவிகள் கைவினை பொருட்கள் நடைபெற்ற காட்சி.
மாணவ-மாணவிகள் கைவினை பொருட்கள் நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி யினை பள்ளி கல்விதுறை முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளிப் பொறுப்பாசிரியர் ஜோசப் தலைமை தாங்கினார்.

நுண்கலை ஆசிரியர் தனராஜா வழிகாட்டலின் படி சங்கு, கிளிஞ்சல்கள், உபயோகமற்ற பொருட்கள், காகிதங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்கிய 200-க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.

பள்ளி மேலா ண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கண்காட்சி யினை பார்வையிட்டனர்.

இந்த கைவினைக் கண்காட்சி க்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஜார்ஜியஸ், அமுதன், ஆசிரியைகள் ராஜஜித்தேந்திரி, ரேணுகாதேவி, தனவந்தினி, புவனேஸ்வரி, ஹேமலதா, அருள்ஜோதி, ஜெயந்தி, வள்ளி மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com