அக்னிபாத் திட்டத்துக்கு நகர மாவட்ட பா.ஜனதா வரவேற்பு

புதுவை பா.ஜனதா நகர மாவட்ட செயற்குழு கூட்டம் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் சாமிநாதன் பேசிய காட்சி. 
பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் சாமிநாதன் பேசிய காட்சி. 
Published on

புதுச்சேரி:

புதுவை பா.ஜனதா நகர மாவட்ட செயற்குழு கூட்டம் நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

இதில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டார். மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், செயலாளர் மற்றும் நகர மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல், நகர மாவட்ட பொதுச்செயலாளர் ஆனந்த கண்ணன் மற்றும் நகர, மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, தொகுதி, அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நாட்டின் வளர்ச்சிக்கும் முழுமையான பாதுகாப்புக்கும் இளைஞர் களை நல்வழிப்படுத்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஏரா ளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இளைஞர்களின் நலன்களை மனதில் கொண்டு பிரதமர், உள்துறை மந்திரி, பாதுகாப்பு துறை மந்திரி ஆகியோர் ஒட்டுமொத்த நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அமல்படுத்திய அக்னிபாத் திட்டத்தை இந்த நகர மாவட்ட செயற்குழு வில் முழுமையாக ஆதரித்து பாராட்டு தெரிவிப்பது.

ரஷ்யா-உக்ரைன் போரில் புதுவையை சேர்ந்த 19 மாணவர்களை மிக சாதுர்யமாக செயல்பட்டு வந்தே பாரத் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்ததற்கு பிரதமருக்கு பாராட்டு தெரிவிப்பது.

கடந்த 24.4.2022 அன்று புதுவைக்கு வருகை தந்து மக்களின் நலனை கருதி வில்லியனூர் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை மந்திரிக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com