மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து

முத்திரையர்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம் தனது சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரியாணி வழங்கிய காட்சி. 
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரியாணி வழங்கிய காட்சி. 
Published on

புதுச்சேரி:

முத்திரையர்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம் தனது சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி அப்பள்ளியில் பயிலும் 500 மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் சிக்கன் பிரியாணி விருந்து தயார் செய்யப்பட்டது. அதனை ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்ட மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com