சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்இசை நிகழ்ச்சி நடக்கிறது
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவையை அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இன்று மாலை 7.30 மணிக்கு மிருத்ஸங்கிர ஹணம் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.7 மணிக்கு சாமி பல்லக்கில் வீதி புறப்பாடு நடக்கிறது.

நாளை மாலை பரதநாட்டியம், இசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நாள்தோறும் காலையில் சுவாமி பல்லக்கில் புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனத்தில் புறப்பாடும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட் டம் வரும் மே 4-ந்தேதி நடக்கிறது. மே 7-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம பெருமாள் பக்தர்கள், சிங்கிரிகுடி கிராமவாசிகள், கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com