புதுவையில் பந்த்- 3 தமிழக அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். சிலை அருகே பெட்ரோல் பங்க் எதிரே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு தமிழக அரசு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.
உடைக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள்
உடைக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள்
Published on

புதுச்சேரி:

இந்து மதத்தையும் இந்து பெண்களையும் இழிவுபடுத்தி பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ராசாவுக்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆ.ராசா பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி மற்றும் இந்து சமுதாய அமைப்புகள் சார்பில் இன்று புதுவையில் பந்த் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் இன்று புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. டெம்போக்களும் ஓடவில்லை. தமிழக அரசு பஸ்கள் மட்டுமே காலையில் இயக்கப்பட்டது.

இன்று காலை சுமார் 5 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த தமிழக அரசு பஸ் வந்தது. வில்லியனூர் மேம்பாலம் அருகே மின்துறை அலுவலகம் எதிரே அந்த பஸ்சை வழிமறித்த கும்பல் பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டார்.

மேலும் எம்.ஜி.ஆர். சிலை அருகே பெட்ரோல் பங்க் எதிரே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு தமிழக அரசு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.

பஸ் பாஸ் சாலையின் அருகே மற்றொரு தமிழக அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வில்லியனூர் போலீசார் வந்து பஸ்சின் கண்ணாடியை உடைத்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அரசு பஸ்சை குறி வைத்து அடுத்தடுத்து 3 இடங்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதட்டத்தை தணிக்க வில்லியனூர் பகுதியில் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com