ஆரோவில்லில் வெளிநாட்டினர் திரண்டதால் பரபரப்பு

ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடையஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரத்தை அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கினார்.வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தி அவர் அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்தனர்.
ஆரோவில்லில் தனிநபர் வாங்கிய இடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநாட்டினர் திரண்டு இருந்த காட்சி.
ஆரோவில்லில் தனிநபர் வாங்கிய இடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநாட்டினர் திரண்டு இருந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

ஆரோவில் சர்வதேச நகரின் அருகே இடையஞ்சாவடி குயிலாப்பாளையம் சாலை இரும்பை வருவாய் கிராமத்தில் விழுப்புரத்தை அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் 2 ஏக்கர் 82 செண்ட் நிலத்தை வாங்கினார்.

ஒரு பகுதியில் சுற்றுச் சுவர் கட்டி அதில் விவசாயம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மற்றொரு இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜே.சி.பி. இயந்திர மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அந்தப் பணியை தடுத்து நிறுத்தி அவர் அமைத்திருந்த கம்பி வேலியை உடைத்தனர்.

இதுகுறித்து சுப்பிரமணியன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் வாங்கிய இடத்திற்கு முறைப்படியான ஆவணங்கள் வைத்துள்ளார். மேலும் இந்த ஆதாரங்களை சுப்பிரமணியன் ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாகத்திடமும் வருவாய் துறையிடமும் அந்த ஆவணங்களை வழங்கி உள்ளார்.

இன்று அவர் மீண்டும் பணியாளர்களை வைத்து இடத்தை சுத்தம் செய்ய முற்பட்ட போது மரங்களை வெட்டக்கூடாது என கூறி 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வலுக்கட்டயமாக வெளியேற்றினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்த இடம் பிரச்சினை தொடர்பாக வெளிநாட்டவர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com