புதுவையில் கொரோனாவுக்கு முதியவர் பலி

இதில் புதுவையில் 39, காரைக்காலில் 8, ஏனாமில் 5 பேர் என புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 9, காரைக்காலில் ஒருவர் என 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவையில் 904 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் புதுவையில் 39, காரைக்காலில் 8, ஏனாமில் 5 பேர் என புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 9, காரைக்காலில் ஒருவர் என 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 257, காரைக்காலில் 51, ஏனாமில் 22 பேர் என 330 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.புதுவையில் 28, ஏனாமில் 5 பேர் என 33 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்த 91 வயது முதியவர் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 20 லட்சத்து 70 ஆயிரத்து 231 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com