அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை

அன்பழகன் எச்சரிக்கை ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

அ.தி.மு.கவின் கொடி, சின்னங்களை பயன்படுத்த ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இதை வரவேற்று புதுவை அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதன்பின் அன்பழகன் கூறியதாவது:-

அ.தி.மு.க. கொடி, சின்னம் பழனிசாமி தரப்புக்கு சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த ஓ.பி.எஸ். தரப்பினர் கோர்ட்டிற்கு சென்றனர். தற்போது கோர்ட்டிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே புதுவையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com