போலி சான்றிதழ் அளித்த பேராசிரியர் மீது நடவடிக்கை-நாம் தமிழர் கட்சி கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க மாநில செயலாளர் ரமேஷ், பொருளாளர் இளங்கோவன், ஆகியோர் கவர்னர், அமைச்சர், அதிகாரிகளிடம் ஒரு மனு அளித்தனர்.பாரதியார் பல்கலைக்கூடத்தில் போலி சான்றிதழ் பெற்று பேராசிரியராக பணிபுரிந்து வரும் நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க மாநில செயலாளர் ரமேஷ், பொருளாளர் இளங்கோவன், தொகுதி தலைவர் சுந்தரவடிவேல், சந்துரு, அன்பரசன் ஆகியோர் கவர்னர், அமைச்சர், அதிகாரிகளிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -

அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் போலி சான்றிதழ் பெற்று பேராசிரியராக பணிபுரிந்து வரும் நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

குறுகிய கால ஒப்பந்தம் ஒப்பந்த பேராசிரியர்களாக பணிபுரிந்து வரும் பேராசிரியர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும்.

பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். குறுகிய கால பேராசிரியர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com