மின்னொளியில் ஜொலிக்கும் புதுவை கலங்கரை விளக்கம்

புதிய கலங்கரை விளக்கம் வம்பா கீரப்பாளையத்தில் துறைமுகம் அருகே கட்டப்பட்டது. இன்று மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 கலங்கரை விளக்கம் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.
 கலங்கரை விளக்கம் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.
Published on

புதுச்சேரி:

இந்தியாவில் கலங்கரை விளக்கங்களை பராமரித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான சட்டம்

1927-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி கொண்டு வரப்பட்டது.

"கலங்கரை விளக்கச் சட்டம்" என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் கலங்கரை விளக்க சட்ட தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து கலங்கரை விளக்கங்களும் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் மின்னும்.

புதுவையில் 2 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. பழைய கலங்கரை விளக்கம் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அது தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.

புதிய கலங்கரை விளக்கம் வம்பா கீரப்பாளையத்தில் துறைமுகம் அருகே கட்டப்பட்டது. இந்த கலங்கரை விளக்கம் தற்போது மின்னொளியில் ஜொலிக்கிறது.

இன்று முதல் 3 நாட்களுக்கு கலங்கரை விளக்கம் மின்னொளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தை பார்வையிட நபர் ஒருவருக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்ப டுகிறது. ஆனால் இன்று மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com