மீன்வளத்துறை வளாகத்தில் வங்கி கிளை அமைக்க வேண்டும்

கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்விவசாயிகளுக்கு அரசு திட்டங்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் பிரத்யேக வங்கிகள் செயல்பாட்டில் உள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மூர்த்திக்குப்பம், நரம்பை கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்டது.

நிர்வாகிகள் வடிவேல், பெரியாண்டி, கதிரவன், கலைஞானம், வாசகன், உத்திராடம், புண்ணி யமூர்த்தி, யோகநாதன், நிர்வாகக்குழு உறுப் பினர்கள், பொதுமக்கள் முருகன், குமார், பிரகாஷ், பிரவீன், செல்வகுமார், கலையரசன், வினோத், ஞானவேல் பேசினர்.

கூட்டத்தில், விவசாயிகளுக்கு அரசு திட்டங்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் பிரத்யேக வங்கிகள் செயல்பாட்டில் உள்ளது.

அத்தகைய வங்கிகள் மீனவர்களுக்கு ஏற்படுத்தப் படவில்லை. புதுவையில் மீனவர்களுக்கு தனி வங்கி கிளையை மீன்வளத்துறை அலுவலகத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பழுதடைந்த சுனாமி குடியிருப்புகளை செப்பனிட்டு தர வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை மண்டல அமைப்பாளர் கலைமணி செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com