புதுப்பேட்டையில் வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ. 23 லட்சம் கையாடல் - 2 பெண்கள் மீது புகார்

புதுப்பேட்டையில் வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ. 23 லட்சம் கையாடல் செய்தாக 2 பெண்கள் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.
மோடி
மோடி
Published on

சென்னை:

புதுப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். சோலார் சிஸ்டம் பொருத்தும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் பெரம்பூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது நிறுவனத்தில் பொழிச்சலூரை சேர்ந்த சரண்யா, பம்மலை சேர்ந்த அனிதா ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வேலை பார்த்து வந்தனர். இவர்களில் அனிதா ரூ. 10½ லட்சமும், சரண்யா ரூ. 12½ லட்சமும் கையாடல் செய்து உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இது தொடர்பாக சரண்யா, அனிதாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com