

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற சிவகாசியை சேர்ந்த ஐயப்பன் என்ற வீரர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்ற கபடி வீரர் கலந்து கொண்டு விளையாடினார். அவர் கபடி விளையாடிவிட்டு தண்ணீர் குடிக்கும் போது திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்தார். #Pudhukottai #KabaddiPlayer #tamilnews