பெரம்பலூர் கிளை சிறையில் இயங்கும் சட்ட உதவி மையத்திற்கு கணினி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் வழங்கல்

முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் பெரம்பலூர் கிளை சிறையில் இயங்கும் சட்ட உதவி மையத்திற்கு கணினி உள்ளிட்ட பொருட்களை கிளை சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.
பெரம்பலூர் கிளை சிறையில் இயங்கும் சட்ட உதவி மையத்திற்கு கணினி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் வழங்கல்
Published on

பெரம்பலூர்:

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிதியிலிருந்து பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பெரம்பலூர் கிளை சிறையில் இயங்கும் சட்ட உதவி மையத்திற்கு கணினி, மேஜை, நாற்காலி மற்றும் சட்ட புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பாலராஜமாணிக்கம் தலைமை தாங்கி பேசுகையில், “இந்த பொருட்களை சிறை வாசிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது குறைகளை உடனுக்குடன் சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கும், சிறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சட்ட புத்தகங்களை படித்து தங்களது திறமைகளை வளர்த்து கொண்டால் குற்றங்கள் குறையும். சிறைவாசிகளின் நலனுக்காகவே மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது.

எனவே அதனை நல்லமுறையில் சிறைவாசிகள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். இதையடுத்து முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் சட்ட உதவி மையத்திற்கு கணினி உள்ளிட்ட பொருட்களை கிளை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) மஸ்ஹரிடம் வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதி யுமான வினோதா, வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தர ராஜன், அட்வகெட் அசோசியேசன் சங்க தலைவர் முகமது இலியாஸ், முன்னாள் அரசு சிறப்பு வக்கீல் பால்ராஜ், வக்கீல் ஜீவானந்தம், கிளை சிறை உதவி கண்காணிப் பாளர் ராமர், சக்திவெல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com