உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு பயம் இல்லை -பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் மத்தியில் எந்த பயமும் இல்லை என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட  பெண், நீதிமன்றத்திற்கு சென்றபோது கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் அச்சமின்றி  குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பெண்ணை எரித்து கொன்ற குற்றவாளிகளுக்கு, பாஜகவில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடந்த ஓராண்டாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு இடமில்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், இங்கு பெண்களுக்கு இடமில்லை என மாநிலத்தை அவர் மாற்றியிருப்பதாக நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com