வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்

வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
மரணம்
மரணம்
Published on

புதுச்சேரி:

புதுவை ஏம்பலம் வில்லியனூர் மெயின்ரோடு வெற்றி வேல் நகரை சேர்ந்தவர் ஏழமலை (வயது 54). இவர் வில்லியனுர் செம்பியபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் சோப் கம்பெனியல் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு துலுக்காணத்தம்மாள் என்ற மனைவியும் 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் ஏழுமலை வேலைக்கு சென்றார். கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென  மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வேலை செய்பவர்கள் அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு ஏழுமலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏழுமலையின் மனைவி துலுக்கானத்தம்மாள் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரில் எனது கணவரின் சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏழுமலையை யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com