கால்வாயில் கழிவுநீர் விடும் தகராறில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை

கால்வாயில் கழிவுநீரை திறந்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய ரவுடி உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர் செல்வம்
தனியார் நிறுவன ஊழியர் செல்வம்
Published on

ஆலந்தூர்:

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம்(வயது 50). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், இவரது வீட்டின் அருகில் உள்ள அஞ்சலி என்பவருக்கும் கால்வாயில் கழிவுநீர் திறந்து விடுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அஞ்சலி தனது மகனும், ரவுடியுமான குறளரசன்(22) என்பவரிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், செல்வத்தை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி குறளரசன், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த செல்வத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு செல்வத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் கொலையான செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவுடி குறளரசன் உள்பட 5 பேரையும் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com