காலாப்பட்டு சிறையில் கைதிகள் விடிய விடிய உண்ணாவிரதம்

காலாப்பட்டு சிறையில் போதிய உணவு வழங்கப்படவில்லை என கூறி சிறைக்கைதிகள் விடிய விடிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுச்சேரி:

கொரோனா தொற்று அபாயம் காரணமாக காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து 4 பெண் கைதிகள் உள்பட்ட 68 சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் ஜாமீனில் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், 200-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படவில்லை என கூறி சிறைக்கைதிகள் நேற்று காலை திடீர் என உணவுகளைப் பெற மறுத்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

விசாரணைக் கைதியுடன் தண்டனை கைதிகளும் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளிடம் சிறை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது. இருப்பினும் கைதிகள் இரவு உணவை புறக்கணித்து தொடர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை சிறை அதிகாரிகள் மீண்டும் கைதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com