வங்காளதேச பொதுத்தேர்தல்: டாக்காவில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் ஷேக் ஹசினா

வங்காள தேசத்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் ஷேக் ஹசினா டாக்காவில் தனது வாக்கை பதிவு செய்தார். #BangladeshGeneralElection
வங்காளதேச பொதுத்தேர்தல்: டாக்காவில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் ஷேக் ஹசினா
Published on

டாக்கா:

வங்காளதேசத்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்காள தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரதமர் ஷேக் ஹசினா இன்று காலை டாக்காவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்காள தேசிய கட்சி (பி.என்.பி.) தலைவர்களின் உதவியுடன் பொதுத்தேர்தலை சீர்குலைக்க முயல்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை வங்காள தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஆளும் அவாமி லீக் கட்சி 150-க்கும் அதிகமான இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com