3 நாள் அரசு முறை பயணமாக தஜகிஸ்தான் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை முதல் 9-ம் தேதி வரை தஜகிஸ்தான் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tajikistan #RamNathKovind
3 நாள் அரசு முறை பயணமாக தஜகிஸ்தான் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on

புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது முதல் மத்திய ஆசிய நாடான தஜகிஸ்தானுக்கு அரசுமுறை பயணத்தை நாளை துவங்க உள்ளார். நாளை முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பயணத்தில் அந்நாட்டு தஜகிஸ்தான் ஜனாதிபதி எமாமோலி ரஹ்மோன், பாராளுமன்ற சபாநாயகர் ஷுகுர்ஜோன் ஜுஹுரோவ், மற்றும் அந்நாட்டு பிரதமர் கோஹிர் ரசுல்ஜோடா ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தஜகிஸ்தான் நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தில் நவீன சமூகத்தில் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். அதேபோல், இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களிடமும் சந்தித்துபேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் இந்த பயணம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த பயணத்தில் ஜனாதிபதியுடன், லோக் சபா உறுப்பினரான சுபாஸ் பம்ரே மற்றும் ராஜ்யசபா உறுப்பினரான ஷம்ஷெர் சிங் ஆகியோர் உடன் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tajikistan  #RamNathKovind

X

Maalai Malar
www.maalaimalar.com