குடியரசுத் தலைவர் போட்டியில் நான் இல்லை - பிரனாப் முகர்ஜி

எதிர்க்கட்சியின் சார்பில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்க இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் போட்டியில் நான் இல்லை - பிரனாப் முகர்ஜி
Published on

எதிர்க்கட்சியின் சார்பில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்க இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவராக உள்ள பிரனாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. கடந்த 2012-ம் ஆண்டில் குடியரசு தலைவராக பதவியேற்ற இவர், காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று டெல்லியில் குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில், குடியரசு தலைவர் தேர்தல் குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் பத்திரிக்கை தொடர்பு செயலாளர் வேணு ராஜாமணிக்கு பிரிவு உபச்சார விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com