பூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது

பூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது
Published on

சீர்காழி:

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகை ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

நேற்று வீடு திரும்பிய சரவணன் நகை பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் பூம்புகார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ராகுல்ட்ராவிட், அகத்தியன் என்ற 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள்தான் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. அவர்கள நகையை ஒரு மின்கம்பம் அருகே புதைத்து வைத்திருந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்து சரவணனிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com