பொன்னமராவதி அருகே வாலிபர் தற்கொலை

பொன்னமராவதி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே உள்ள கீழேவேகுப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சரவணக்குமார் (வயது 22). இவரது பெற்றோர் இவரை படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சரவணக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணக்குமாரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com