பொன்னமராவதி அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை

பொன்னமராவதி அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னமராவதி அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை
Published on

பொன்னமராவதி, நவ. 7-

பொன்னமராவதி அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருமயம் முருகாண் டிபட்டி விலக்கு சாலையில் அமைந்துள்ள அம்மனிப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரையா (வயது 40). திரும ணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியில் உள்ள கல் குவ ரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல் குவாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டி ருந்தது. இதற்கிடையே குவாரிக்குள் காவலாளி சென்று பார்த்தபோது அங்கு வீரையா கொலை செய்யப் பட்டு பிணமாக கிடந்தார்.

அருகிலேயே ரத்தக்கறை படிந்த கற்கள் கிடந்தன. எனவே அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்திருப்பது உறுதியானது. இதுகுறித்த தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த இடத்திற்கு சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் விசாரணை நடத்தினார். திருமணமாகாத அவருக்கு சில பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்ப டுகிறது. எனவே அது தொடர் பான பிரச்சினையில் வீரையா கொலை செய்யப் பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீபாவளி நாளில் லாரி டிரைவர் கொலை செய்யப் பட்டது.அந்த பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியது. * * * குவாரியில் கொலையுண்ட லாரி டிரைவர் வீரையா பிணமாக கிடந்த காட்சி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com