பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஜீவாநகரை சேர்ந்தவர் சின்னையா.இவரது மகன் சின்னக்காளை(வயது55).இவர் தனது மனைவி பொன்னம்மாளுடன் பூலான்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட் வண்டியில் சென்றுள்ளார்.

வேகுப்பட்டி நால்ரோடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் இவரது வண்டி மீது மோதியது. இதில் சின்னக்காளைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் வலையபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னக்காளை இறந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com