மறைவுக்கு பிறகும், தனது சேவையால் சிவந்தி ஆதித்தனார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்- தலைவர்கள் புகழாரம்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதற்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #SivanthiAditanar #Manimandapam
மறைவுக்கு பிறகும், தனது சேவையால் சிவந்தி ஆதித்தனார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்- தலைவர்கள் புகழாரம்
Published on

சென்னை:

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதற்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

தமிழ் மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, சாதாரண மக்கள் நலன் காப்பதிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து நற்பணிகளை செய்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதன் மூலம் அவரது புகழ் வளர்க, ஓங்குக என்று த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன்.

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டு விழா நடத்தியிருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது.

பாமரரும் பத்திரிகையை படிக்கும் பழக்கத்தை உருவாக்கியவர்.

தினத்தந்தி பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து போது தனது திறமையால், கடின உழைப்பால் நாளிதழின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் பாடுபட்டவர். பத்திரிக்கை உலகில் கொடி கட்டி பறந்த செம்மனச் செம்மல் சிவந்தி ஆதித்தனார் கல்வி, தொழில், விளையாட்டு, ஆன்மீகம் போன்ற பல்வேறு துறைகளில் சாதனையாளராக திகழ்ந்தவர்.

குறிப்பாக தொண்டுள்ளம் கொண்டவராக ஏழை, எளிய, சாதாரண மக்களுக்கு உதவிகளை செய்த பண்பாளர். இவர் செய்த திருப்பணிகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதற்காக டாக்டர் பட்டம் பெற்ற பாராட்டுக்குரியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற வாழ்நாள் சாதனையாளர் என்று சொல்லலாம்.

எனவே சரித்திரமாக வாழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய நற்பணிகளுக்கு தமிழக மக்களின் வாழ்த்தும், பாராட்டும் என்றுமே உண்டு.

மேலும் தமிழக அரசு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பது சாலச்சிறந்தது.

தமிழ் மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, சாதாரண மக்கள் நலன் காப்பதிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து நற்பணிகளை செய்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதன் மூலம் அவரது புகழ் வளர்க, ஓங்குக என்று த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா:-

தினத்தந்தி நாளிதழின் மறைந்த அதிபர் ஐயா சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வழியாக திருச்செந்தூரில் மணிமண்டப அடிக்கல் நாட்டுவிழா நாட்டியிருப்பது தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெரியவர் ஐயா ஆதித்தனார் வழியில் சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய தொண்டிற்கு ஒரு அடையாளம் என்றே சொல்லலாம்.

பத்திரிகைத்துறையில் இருந்து கொண்டு பல்வேறு துறைகளில் ஆன்மீகம், கல்வி, வணிகம், விளையாட்டு தமிழ்மொழி வளர்ச்சி என, தன் இருப்பினை உணர்த்தி தனது முத்திரையை தனித்தே பதித்துச் சென்ற பண்பாளர் ஐயா சிவந்தி ஆதித்தனார்.

இளைய தலைமுறையினருக்குள் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி பத்திரிகைத் துறையில் மாபெரும் புரட்சியைச் செய்ததோடு, மக்கள் சேவையிலும் தனது பணியினை தொய்வின்றிச் செய்திருப்பவர் என்றால் மிகையாகாது. மறைவிற்கு பின்னும் தனது சேவையினால் வாழ்ந்து கொண்டிருக்கும் அவருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  #SivanthiAditanar #Manimandapam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com