

வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மதுவிலக்கு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரேணுகாந்த். இவர் நாய் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு பிறந்து 40 நாட்கள் ஆன ஜெர்மன் ஷெப்பர்டு் நாய் குட்டியை வளர்ப்பதற்காக கொடைக்கானலில் இருந்து வாங்கி வந்தார்.
பின்னர் அந்த நாய்க்கு பவுலி என பெயர் சூட்டி தன்னுடைய வீட்டில் செல்லமாக 8 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த நாய்க்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனது. இதனால் ரேணுகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த சோகம் அடைந்தனர். தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் நாயை அடக்கம் செய்தனர்.
நாய் மேல் கொண்ட பாசத்தால், அதன் நினைவாக தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் அந்த நாய்க்கு மெழுகுச்சிலை அமைத்து போலீஸ்காரர் ரேணுகாந்த் பராமரித்து வருகிறார்.