ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பரிதாப பலி

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆப்பக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பரிதாப பலி
Published on

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 48). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினம்.

தற்போது சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் ஈரோடு பாராளுமன்ற தொகுதி ஓட்டு பதிவு எந்திரங்கள் உள்ள சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் பணி முடித்து மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊரான மேட்டூர் தங்கமாபுரிபட்டினம் சென்று கொண்டிருந்தார்.

மேட்டூர் அருகே நவப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு ஈச்சேர் வேன் எதிர்பாராத விதமாக மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் அவரது தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் உடல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

பலியான கோபால கிருஷ்ணனுக்கு சுஜாதா(46) என்ற மனைவியும் சஞ்ஜய் என்ற மகனும் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.

விபத்து குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com