மாமல்லபுரத்தில் கோவில் அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தை- போலீசார் விசாரணை

மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி மாரியம்மன் கோவில் அருகே மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீட்கப்பட்ட குழந்தை
மீட்கப்பட்ட குழந்தை
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி மாரியம்மன் கோவில் பின்புறம் பச்சிளம் ஆண் குழந்தை நீண்ட நேரம் அழுதபடி இருந்தது. குழந்தை அருகே யாரும் இல்லை.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவிலுக்கு வந்தவர்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

குழந்தை வீசப்பட்ட இடம் அருகே ஒரு பை மட்டும் கிடந்தது. அதில், ‘ஜனவரி 31-ந்தேதி திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை’ என்ற ஓ.பி. சீட்டு மட்டும் இருந்தது.

குழந்தை யாருடையது என்று தெரியாததால் போலீசார் செங்கல்பட்டு குழந்தைகள் நல அலுவலர் கீதாஞ்சலியிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

குழந்தையின் பெற்றோர் யார்? யாரேனும் குழந்தையை கடத்தி வந்து வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com