

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் ‘ரூட் தல’ என்ற பெயரில் மாணவர்கள் கத்தியுடன் சாலையில் மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும், மாணவர்கள் மீதான வெறுப்பையும் உருவாக்கியது. மாணவர் சமுதாயத்தை சீரழிக்கும் இதுபோன்ற ‘ரூட் தல’ என்ற பெயரில் நடக்கும் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.