

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி நக்கீரனில் கட்டுரை வெளியானது. இதையடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் நக்கீரன் அலுவலக ஊழியர்கள் மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நக்கீரன் கோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக வரும் 25-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.