நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் - போலீசார் தடியடி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். #ManonmaniamSundaranarUniversity #StudentsProtest
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் - போலீசார் தடியடி
Published on

திருநெல்வேலி:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு அபராதம் வசூலிப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில் வருகை பதிவு குறைவான மாணவர்களுக்கான அபராத கட்டணத்தை பலகலைக்கழக நிர்வாகம் உயர்த்தியது.

இதனை கண்டித்து மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, அதனை கட்டுப்படுத்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், கலைந்து செல்ல மறுத்த மாணவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #ManonmaniamSundaranarUniversity #StudentsProtest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com