போத்தனூர் அருகே மதுக்கடையில் தகராறு - வாலிபர் குத்திக்கொலை

போத்தனூர் அருகே மதுக்கடையில் தகராறில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போத்தனூர் அருகே மதுக்கடையில் தகராறு - வாலிபர் குத்திக்கொலை
Published on

கோவை:

கோவை போத்தனூர் அருகே உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மகன் ஜான் பிரிட்டோ (வயது 28). பெயிண்டர். இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

நேற்று இரவு ஜான் பிரிட்டோ தனது நண்பரான பிரவீன் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அங்கு இருந்த போத்தனூரை சேர்ந்த காட்வின்ராஜ், மில்டன், குட்டி ஆகியோருக்கும், ஜான் பிரிட்டோவுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். ஜான் பிரிட்டோ தாக்கியதில் காட்வின்ராஜூக்கு வயிறு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அங்கு இருந்தவர்கள் 2 கும்பலையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஜான் பிரிட்டோவை அவரது நண்பர் பிரவீன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது ஆத்திரம் அடைந்த காட்வின்ராஜ், மில்டன், குட்டி ஆகியோர் இவர்களது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து விரட்டி வந்தனர். ஜான் பிரிட்டோ மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல முயன்ற போது விரட்டி வந்த கும்பல் அவரை வயிறு மற்றும் மார்பில் கத்தியால் குத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இதில் நிலைகுலைந்த ஜான் பிரிட்டோ ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது வீட்டில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜான் பிரிட்டோவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜான் பிரிட்டோ பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜான்பிரிட்டோவை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய காட்வின்ராஜ், மில்டன், குட்டி ஆகியோரை தேடி வந்தனர்

இந்தநிலையில் ஜான் பிரிட்டோ தாக்கியதில் படுகாயம் அடைந்த காட்வின் ராஜ் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது.மேலும் தலைமறைவாக உள்ள மில்டன், குட்டி ஆகியோரை போத்தனூர் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com