போச்சம்பள்ளியில் அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் கொள்ளை- சென்னை வாலிபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் கொள்ளையடித்த சென்னையைச் சேர்ந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளியில் அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் கொள்ளை- சென்னை வாலிபர் கைது
Published on

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் போச்சம்பள்ளி வடமலம்பட்டி பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இதே பகுதியில் ஊத்தங்கரையை சேர்ந்தவர் மணிமாறன். என்பவரும் செல்போன் கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இவர்கள் இருவரும் வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் செல்போன் கடைகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பின்னர் 2 கடைகளிலும் இருந்து மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

இது குறித்து செல்போன் கடைகாரர்கள் போச்சம்பள்ளி போலீசாருக்கு தெரிவித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மணிமாறன் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 3.30 மணியளவில் மர்ம கும்பல் காரில் வந்து கடையின் கதவை உடைக்க முயற்சி செய்தார். கதவை உடைக்க முடியாததால் கதவில் கயிறை கட்டி, அதனை காரிலும் கட்டி இழுத்தனர். அப்போது கதவு உடைந்ததும் கடைக்குள் புகுந்து செல்போன்களை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்றனர். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது.

இதையெடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மகேஸ்குமர் உத்தரவின்பேரில், பர்கூர் டி.எஸ்.பி. தங்கவேல் அறிவுறுத்தலின்படி, போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தனிப்படை அமைத்து சி.சி.டி.வி கேமராவின் பதிவுகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில், திருடப்பட்ட செல்போன்கள் சென்னை கண்ணகி நகரை அடுத்த பெரியார் நகரை சேர்ந்த சயாத்து என்பவரது மகன் சலாவூதின் (வயது 35) என்பவர் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சலாவூதின் கைது செய்யப்பட்டு அவரிடம், போச்சம்பள்ளி கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் எங்கு உள்ளனர். போச்சம்பள்ளியில் காரில் வந்த நபர் யார்? காரில் ஒருவர் மட்டும் இருந்தாரா? அல்லது கூட்டாக வந்தனரா? என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட சலாவூதினிடம் தொடர்ந்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com