

புதுடெல்லி:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இசை அஞ்சலி செலுத்தும்வகையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த மத்திய மந்திரி பாபுலால் சுப்ரியோ ஒரு வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார்.
அந்த பாடலை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இணைத்ததுடன், அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பது பிரணாப் முகர்ஜிக்கான மனதை தொடும் அஞ்சலியாக இருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டின் உணர்வுகளை பாபுலால் சுப்ரியோ வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.