சீக்கிய குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம்- பிரதமர் நாளை வெளியிடுகிறார்

சீக்கிய குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக புதிய நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.#SikhGuruGobindSingh #PMModi
சீக்கிய குரு கோபிந்த் சிங் நினைவு நாணயம்- பிரதமர் நாளை வெளியிடுகிறார்
Published on

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் மறைவுக்கு பின்னர் பலர் அம்மதத்தில் குருமார்களாக இருந்து சீக்கியர்களை வழிநடத்தி வந்தனர். இவ்வகையில் 10-வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் 1708-ம் ஆண்டில் மறைந்தார். இவரது  பிறந்தநாளை கொண்டாடும் வகையில்  நினைவு நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிடவுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, அவரது இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், குரு கோபிந்த் சிங் நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com