உலகின் மிகவும் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை - அக்டோபர் 31-ம் தேதி மோடி திறக்கிறார்

குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை அக்டோபர் மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். #SardarPatelstatue
உலகின் மிகவும் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை - அக்டோபர் 31-ம் தேதி மோடி திறக்கிறார்
Published on

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு.

குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக நரேந்திர மோடி பதவிவகித்த போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சிலையை உருவாக்க கடந்த 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com